[{“des”:”யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றைnநிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர்nடக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கலந்துரையாடியுள்ளார்.”},{“des”:”யாழ்ப்பாணம் (Jaffna) மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும்nவரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவை கருதி நகரப்பகுதியில்nநவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ்nதேவானந்தாவினால் திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.”},{“des”:”இதற்கமைய இன்றையதினம் (15) குறித்தnதிட்டவரைபுகளை உறுதி செய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.”},{“des”:””},{“des”:””},{“des”:”இந்நிலையில், குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கான திட்டவரைபுகள் உறுதி செய்யப்பட்டதுடன் இந்த திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.”},{“des”:””},{“des”:”நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடல்களை அடுத்து விரைவில்nநிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.”},{“des”:”இக்கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர்கள் அபிவிருத்திnஅதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.”},{“des”:””},{“des”:””}]