ஐஸ்வர்யா- உமாபதி திருமண வாழ்க்கை குறித்து நடிகர் அர்ஜுன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் அர்ஜீன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன்.
இவர் கடைசியாக லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.
ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜீனின் மூத்த மகளுக்கு கடந்த ஜூன் 10 அன்று தம்பி ராமையா மகன் உமாபதிவுடன் திருமணம் நடந்தது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து புதுமணத் தம்பதி வாழ்த்து பெற்றுள்ளனர்
அதே சமயம் அர்ஜீன், ஐஸ்வர்யா- உமாபதியின் காதல் கதை குறித்து செய்தியாளர்களிடம் சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசிய போது, ” உமாபதியிடம் பல திறமை உள்ளன. தற்போது திரைப்படமொன்றை இயக்கி வருகிறார். என்னுடைய குடும்பம் உமாபதியை மருமகனாக வரவேற்கிறது. இதனால் என்னுடைய மகளை எப்போதும் பெருமையாக நினைப்பேன்.
ஒரு நாள் என்னுடைய இரண்டாவது மகள் என்னிடம் வந்து, “ ஐசு ஏதோ பேச வேண்டும் என்கிறார்..” எனக் கூறினார். அப்போதே காதல் கதை என்று எனக்கு தெரியும். ஆனால் யார் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
ஐஸ்வர்யா, உமாபதி என கூறியதும் ஆச்சரியமாக இருந்தது. சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தே உமாபதியை எனக்குப் பிடிக்கும். அதனால் நானும் என்னுடைய மனைவியும் காதலுக்கு சரி கூறினோம். நானும் தம்பி ராமையா சாரும் நிறைய படங்கள் இணைந்து நடித்திருக்கிறோம். நல்ல குடும்பம்.
இந்த குடும்பத்திற்கு மருமகளாக என்னுடைய மகள் சென்றது எனக்கு பெருமையாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஐஷூ நடிப்பார்களா? என பலரும் கேட்டார்கள். வாழ்க்கை பெரிது. அதில் தொழில் சிறியது. இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஐஷூதான் எடுப்பார்” என பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அர்ஜீன், தம்பி ராமையா, உமாபதி பேசினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.