நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலக்கூடத்தில் இருந்து ஒருவரின் சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையை சேர்ந்த 52 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழப்பிற்கான காரணம் அறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினமும் நுவரெலியா ருவன்எலிய பகுதியை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் குறித்த மலசலக்கூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளர்.