ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.L. ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளிவிபர அறிக்கையைத் தயாரிக்குமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
தேர்தலொன்றுக்கு அவசியமான நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டு வருவதாக அரச அச்சகம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
முந்தைய வருடங்களைப் போலவே இப்போதும் மூலப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்து காணப்படுகின்றமையினால், முழுமையான செலவு தொடர்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டார்.