துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் இருவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் மோப்ப நாய்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட கைதிகள் இருவர் நேற்று (28) தப்பிச் சென்றுள்ளனர்.
திருட்டுக் குற்றங்கள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஹொரணையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.