கதிர்காமக் கந்தன் ஆலய ஆடி உற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை இன்று(30) திறந்து வைக்கப்பட்டது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் உகந்தை முருகன் ஆலயத்தில் விசேட பூஜையுடன் இந்த பாதை திறக்கப்பட்டது.வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடி உற்சவம் எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.