தயாசிறி ஜயசேகரவை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாசிறி ஜயசேகர இன்று(02) முதல் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.