கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு போர்ட் சிட்டியில் வர்த்தகம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்களால் வணிக நடவடிக்கைகளை தொடங்குவதில் உள்ள தடைகளை நீக்கி கொழும்பு துறைமுக நகரத்தை உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த சிறப்பு பொருளாதார வலயமாக அதிகரிக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆணைக்குழு இதனடிப்படையில், 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை உரிய திருத்தங்களை இணைத்து திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது