நயன்தாரா என்றாலே அவரை சுற்றி பல சர்ச்சைகளும் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் நயன்தாரா சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் செம்பருத்தி தேநீர் குடித்தால் உடல் நலத்திற்கு என்பது போல் ஒரு கருத்தை பதிவு செய்தார்.
அதோடு ஒரு நியூட்ரிஷனையும் Tag செய்திருந்தார். இதை பார்த்த மருத்துவர் ஒருவர், செம்பருத்தி தேநீர் குடிப்பதால் இதற்கு நல்லது , அதற்கு நல்லது என நிரூபிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க தன் நியூட்டிரிஷனுக்கு ஒரு விளம்பரம் தான் செய்துள்ளார் நயன்தாரா என கடுமையைக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த நயன்தாரா, முட்டாள்களிடம் விவாதம் செய்யமுடியாது. அவர்கள் அவர்களின் தகுதிகளுக்கு நம்மை இழுத்து பின் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் என்று நயன்தாரா பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு நயன் தாராவின் ரசிகர்கள் ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.