கோட் பிரஸ் மீட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியன் படமாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் கலந்து கொண்டு பல கேள்விக்கு பதிலளித்துள்ளனர். அதில் ஒருவர், கோட் படத்தில் விஜய் நடிக்கும் போது தான் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தார்.
விஜய் சினிமாவில் இருந்து விலக காரணம்
விஜய் சினிமாவில் இருந்து விலக காரணம் நீங்கள் தானா என்று கேள்வி எழுப்பினார். இதனை கேட்டு ஷாக்கான வெங்கட் பிரபு, தலையில் அடித்துக்கொண்டு, என்ன கொடுமை சார் இதெல்லாம்!! என்று சொல்லிவிட்டு, விஜய்யின் ரசிகன் என்கிற முறையில் ஏன், சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமெ என்று நானே அவரிடம் கேட்டு இருக்கிறேன்.
அதற்கு விஜய் அப்புறம் பார்க்கலாம் என்றும் அரசியல் குறித்து பேசியதே இல்லை என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.