இந்தியாவை தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்நாட்டை அணு ஆயுதத்தால் தாக்குவேன் என்றும் பிரித்தானிய பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.பிரித்தானியாவைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் (Miles Routledge) என்பவர் சமூக வலைதளத்தில் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
மைல்ஸ் இந்த பதிவை புதன்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ்-இல் செய்தார். இருப்பினும், மைல்ஸின் இந்த பதிவு வேடிக்கையானது.
ஒரு சிறிய தவறுக்கு கூட, இந்தியா உட்பட பல நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவேன் என்று மைல்ஸ் பதிவிட்டார். ஆனால் பின்னர், மைல்ஸ் அந்த பதிவை நீக்கினார்.
இதுபோன்ற ஒரு பதிவு இணையத்தில் மக்கள் மத்தியில் பரவியதை அடுத்து, மைல்ஸின் பதிவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த மைல்ஸ், “எனக்கு இந்தியாவை பிடிக்கவில்லை. இது தவிர, இனவெறி கருத்துகளையும் அவர் தெரிவித்தார்.மற்றொரு பதிவில், “நான் பிரித்தானியாவின் பிரதமரானால், பிரிட்டிஷ் விவகாரங்களில் தலையிடும் எந்த நாட்டையும் எச்சரிக்க அணுசக்தி தாக்குதலை நடத்துவேன். நான் பாரிய சம்பவங்களைப் பற்றி பேசவில்லை, சிறிய தவறுகளுக்கு கூட, முழு நாட்டையும் அழிப்பேன்” என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் சிக்கிய மைல்ஸ்
மைல்ஸ் ரூட்லெட்ஜ் 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியபோது அங்கு சிக்கிக்கொண்டார்.
பிரித்தானிய அரசின் எச்சரிக்கைக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலைப் பார்க்க அவர் சென்றார்.
இதையடுத்து மைல்ஸ் அங்கேயே சிக்கிக் கொண்டார். ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து பிரிட்டிஷ் இராணுவம் அவரை புர்கா அணிந்த பெண்ணின் வேடத்தில் வெளியே அழைத்துச் சென்றது.இந்த சம்பவத்திற்குப் பிறகு, மைல்ஸ் Dangerous Tourist என்று பிரபலமானார்.
மைல்ஸ் டிசம்பர் 2022-இல் அன்ட்லாப் ஹில் உடன் இணைந்து ‘ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சி’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.கஜகஸ்தான், உகாண்டா, கென்யா, தெற்கு சூடான், உக்ரைன் மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல இடங்களுக்கு மைல்ஸ் பயணம் செய்துள்ளார். பல முறை தவறாக எல்லை தாண்டியதற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் அவர் சிறைக்கு சென்றுள்ளார்.