மாகோல – சபுகஸ்கந்த பிரதான வீதியில் கார் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்குநேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது
கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்