மாத்தளை சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் கெக்கிராவ, கிரானேகம பிரதேசத்தில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.காப்பகத்திலிருந்த மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாகக் குறித்த சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 17 வயதுடைய சிறுமியும், 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் மூவரும் தற்போது கெக்கிராவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.