கொழும்பு – தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துநர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துநரே பயணியை தாக்கியுள்ளார்.
வீதி இலக்கம் 163 தெஹிவளை – வெளிநாட்டுச் வேலை வாய்ப்பு பேருந்தில் பயணித்த நடத்துனரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
அதோடு நடத்துனர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்தனர்.