கேகாலை- மாவனெல்லை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குள் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு நுழைந்த கெப் வாகனம் ஒன்று அருகில் இருந்த வைத்திய ஆய்வுக்கூடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாவனெல்லை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குச் சொந்தமான கெப் வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி வைத்தியசாலையில்விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் வைத்திய ஆய்வுக்கூடத்தின் மதில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரியாலயத்திற்கு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செயலிழந்த கெப் வாகனம் ஒன்றை இயக்க முற்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ள தெரிவித்த மாவனெல்லை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.