கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அலுவலகம் கடந்த 10ஆம் திகதி அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதனுள்ளிருந்த பொருட்கள் சிலவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(16) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.