யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் கொடுத்த நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.காலியில் (galle) இடம்பெற்ற பொது கூட்டத்தின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.தற்போது நாடு பெற்றுக் கொண்டிருக்கும் பணம் ஏதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களின் உரிமைஎனவே, பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, வேறு வழிகள் இல்லாததால், கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு செல்லும் இந்தப் பயணம் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதன் போது, இளைஞர்களின் உரிமைகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அவர்களுக்கு நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது தனது கடமை என மேலும் தெரிவித்துள்ளார்.