இரத்மலானை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த திருடர்களின் கத்திகுத்து தாக்குதலில் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரத்மலானை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயற்சித்தபோது அதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த ரயில்வே ஊழியர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.