90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த மீனா, தற்போது சில படங்களில் நடிக்கிறார்
மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது கணவர் மரணமடைந்தது அவருக்கு பெரிய இழப்பை கொடுத்தது. அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு மாறிய நிலையில், மீனா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார், அந்த நடிகர் தான் என்று பல கிசுகிசுக்கள் வெளியானது. இதனை மறுத்தும் கருத்தினை பகிர்ந்திருந்தார் மீனா.அதை மீறியும் பலர் இரண்டாம் திருமணம் குறித்து செய்திகளை பகிர்ந்து வந்தனர். மேலும் அரசியல் பிரமுகர் ஒருவரையும் இணைத்து வைத்து கிசுகிசு பரப்பினர். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை மீனா கோபத்தில் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
“நான் ஒரு நிலையான உள் போராட்டத்தை அனுபவித்து வருகிறேன்.மிகவும் வலியை உணர்கிறேன். ஆனால், நீங்கள் என்னை பார்க்கும் போது நன்றாக இருப்பது போல் தோன்றும். முகமூடியின் பின் மறைத்து வைத்திருக்கிறேன். வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள், முட்டாள்கள் முட்டாள்களாகவே தான் இருப்பார்கள்” என்று சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார் நடிகை மீனா.