[{“des”:”நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.”},{“des”:”அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.”},{“des”:”ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:”அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாம் எடுத்த நடவடிக்கைகளின் முதன்மையான பயனாளிகள் இலங்கையின் பொது மக்களே என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். தொழிலை இழந்து சொத்துக்களை அடகு வைத்து நிலத்தை விற்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.””}