இலங்கையில் நாளாந்தம் சுமார் ஆயிரம் சட்டவிரோதக் கருக்கலைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விசேட மருத்துவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதக் கருக்கலைப்பு
அத்தோடு, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின்மையே சட்டவிரோதக் கருக்கலைப்பு அதிகரிப்புக்குக் காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது