நாடளாவிய ரீதியில் இன்று (15-09-2024) 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
இதன்படி, மட்டக்களப்பின் 5 கல்வி வலயங்களிலும் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியுள்ளனர்.
இன்று காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.
இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.