இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர் விராட் கோலி(Virat Kholi) இன்று (29) இலங்கையை வந்தடைந்துள்ளார்.இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
விராட் கோலிஇதில் பங்கேற்பதற்காகவே விராட் கோலி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை, இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இந்தியா 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.மீதமுள்ள ஒரு போட்டி நாளை(30) நடைபெறவுள்ளது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒகஸ்ட் 2,4,7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.