தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், சமீபத்தில் தானே இயக்கி நடித்த ராயன் படத்தினை ரிலீஸ் செய்திருந்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து அடுத்த படமான குபேரா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கிடையில் தன் மகன்கள் இருவருடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சில ஆண்டுகளுக்கு முன் சட்டப்பூர்வமான விவாகரத்து பெற நீதிமன்றம் நாடியிருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் கொடுத்த பழைய பேட்டியொன்று இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. என் இரு பசங்களும் என்னை போல் தான் உருவத்தில் இருக்கிறார்கள் பாவம். யாத்ரா குணத்தில் என்னை போல் இருப்பான். உணவில் மட்டும் அவர் அசைவம். நான் சைவம். மற்றபடி பெரும்பாலும் என்னை போன் குணம் தான்.
ஆனால் லிங்கா தான் அவங்க அம்மா மாதிரி. அவங்க அம்மா ரொம்பவே உஷார். ஏமாத்தவே முடியாது. அதேபோல் தான் லிங்காவும் இருக்கிறார், அவர் வளர்ந்த பின் என்னை செய்வார் போல என்று தனுஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.