[{“des”:”இலங்கைக்கான (Sri Lanka) சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிதியுதவி தொடர்பான மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகப் பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.”},{“des”:”இதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கமைய, எதிர்வரும் செம்டெம்பர் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் குறித்த மீளாய்வு நடைபெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:”அரசியலமைப்புக்கமைய குறித்த காலப்பகுதியில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டுமென்ற காரணத்தால் நிதியத்தின் மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.”},{“des”:”இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேட்பாளராக களமிறங்குவார் என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”எனினும், அவர் அரசியல் செய்வதற்காக தேர்தலில் களமிறங்கப்போவதில்லை எனவும் இலங்கையை கட்டியெழுப்புவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.”},{“des”:”அத்துடன், இலங்கையின் கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் ஊடாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:”இவ்வாறான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்சியடையுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.”},{“des”:”இலங்கையின் பொருளாதாரம் மேம்படுவதை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டுவதன் ஊடாக அதிக முதலீடுகளை ஈர்க்க முடியுமெனவும் முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடியுமெனவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.”},{“des”:””},{“des”:””}]