இந்தியாவில் (India) திருமண நிகழ்வு ஒன்றில் ஒரு ரூபாவை வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவமானது இந்தியா, ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விலேயே இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருமணம் முடிவடைந்த பின்னர் மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை என்ற தீய பழக்கம்
அத்துடன், வரதட்சணை என்ற தீய பழக்கத்தை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அவர் இதனைக் கடைப்பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும், மனைவிக்கு அரசு வேலைக் கிடைத்தால் ஒரு வருட சம்பளத்தை மனைவியின் பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.