பணமோசடி செய்த குற்றச்சாட்டில் பெல்ஜிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பெல்ஜியம் நாட்டவர் பல கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவரிடமிருந்து 6 கோடியே 38 லட்சத்து 18ஆயிரத்து 452 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளாமல் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான பெல்ஜிய பிரஜை என தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.