களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று(24) முற்பகல் தீ பரவல் ஏற்பட்டது.
மாவட்ட செயலகத்தின் கீழ் தளத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்கசிவினால் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.