சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவைக் கொல்ல வந்த இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெண் உட்பட மேலும் பலர் கண்டு பிடிப்பு
நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பல சந்தேக நபர்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், கொலையின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்று தயார்படுத்தப்பட்டு, அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக மேலதிக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் முன்னாள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் மற்றும் அவர்களது குழுவினரும் அதுருகிரி பகுதியில் 6 மாத காலத்திற்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு தெற்கு பிரதி காவல்துறை மா அதிபர் கயங்க மாரப்பனவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.