கொழும்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பெண் ஒருவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முச்சக்கரவண்டிக்கு பின்னால் பேருந்து ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பேருந்தின் சாரதியும் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.