சிலாபம் – மாரவில பிரதேசத்தில் காரும் வானும் மோதி விபத்திற்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.மாரவில பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிவேகமாக வந்த வான் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் வெளியிட்ட தகவல்இந்த விபத்தில் பம்பல, ஹலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மடு தேவாலயத்திற்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்திற்குள்ளான காரின் சாரதி குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.