வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய தாழமுக்கம் தற்போது சூறாவளியாக விரிவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
றீமால் என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி வடக்கு திசையாக பயணித்து இன்று நள்ளிரவு பங்களாதேஷ் மற்றும் அதனை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடா கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பெண்களின் வங்கி கணக்கு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
தெற்காசியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் எண்ணிக்கையானது 89 சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் சராசரி 65.8% ஆகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 89.3% ஆகவும் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி(CBSL) தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதே வருமானம் கொண்ட 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் கணக்கு வைத்திருப்பவர்களின் சதவீதம் இலங்கையில் அதிகமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.