யாழ்ப்பாணத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.வடமராட்சி பிரதேச செயலகத்தி முற்றுகையிட்டு இன்று குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மருதங்கேணி, மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களே இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். தாழையடி
கடந்த 02.08.2024 அன்று யாழ். தாழையடிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாழையடிக்கென தனி கிராமமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மருதங்கேணி மக்கள் குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளர்.
”வடமராட்சி கிழக்கை கூறுபோடாதே, பிரதேச செயலகத்தை மருதங்கேணி என மாற்றாதே, போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை காட்சிப்படுத்தி குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.