வவுனியா (Vavuniya), நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் இன்று (06.08.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்புசடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது
மேலும் குறித்த வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில், அண்மைக்காலமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.