புதிய இணைப்புதிருகோணமலை குச்சவெளி காவல் பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு பிரதேசம் தெகிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சுற்றுலா செய்ய இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60 , 40 வயது மற்றும் 45 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
குறித்த தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் நிலாவளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் கடந்த 27 ஆம் திகதி மாலை இடம் பெற்றுள்ளதுடன் இது சம்பந்தமான நடவடிக்கையை 28 ஆம் திகதி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முன்னிலைப்படுத்தியவர்களில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என தெரிவித்து அவருக்கு சரீரபிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.