“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 57 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 1.086 கிலோகிராம் ஹெரோயின், 782.7 கிராம் ஐஸ், 3.74 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பு
கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாத்தறை (Matara) காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாதோடகம பிரதேசத்தில் 408 கிரேம் 650 மில்லிகிரேம் ஹெரோயின் மற்றும் 217 கிரேம் 150மில்லிகிரேம் ஐஸ் ரக போதைபொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நாளை (08) மாத்தறை மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.