நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு மாகாண புதிய ஆளுநராக வேதநாயகம் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர் குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வடக்கு மாகாண புதிய ஆளுநராக வேதநாயகம் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர் குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.