90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா. மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா, 2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர்.
இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், மும்பை மேற்கு பந்த்ராவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை 9 மணியளவில் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். வணிகக் கப்பல் துறையில் பணிபுர்ந்து ஓய்வு பெற்ற அனில் அரோரா சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
அவரது தற்கொலை தற்போது பாலிவுட் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது உடலை பார்க்க தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் மலைக்கா அரோராவின் அம்மா வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.