நான்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகளை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி சம்மேளனம், மோட்டார் விளையாட்டு சங்கம், வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தேர்தல்கள் உரிய முறையில் நடத்தப்படும் வரை, அவற்றை இன்று(29) முதல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.