பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த சிறுவனை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அண்மையில் சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராட்டிய ரணில்
கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்த மாணவனை அதிபர் ரணில் இவ்வாறு பாராட்டியதுடன் கடலில் நீந்திய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் சாதனை படைத்த சிறுவனின் தாய் மற்றும் தந்தையர் என குடும்பஸ்தரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.