புதிய இணைப்பு
செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை முடிவடையும் நேரத்திற்கு பின்னர் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இரண்டாம் இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு (Ministry of Education ) முறையான கடிதம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, வாக்குப்பதிவு மையங்களாக நியமிக்கப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.