பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்ரஸா பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பான வழக்கொன்றில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். அலி சப்ரி ரஹீம், இன்று(20) முற்பகல் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்காக வந்திருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.