தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.
அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், இப்போது எஸ் ஜே சூர்யா வுக்கு 55 வயது ஆகிறது. இவர் நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு பிரியா பவானி, சார் உங்களுக்கு என்னுடைய அப்பா வயது, நான் எப்படி..அதுமட்டும் இல்லாமல் எனக்கு காதலர் இருக்கிறார் என்று சொல்லி எஸ் சூர்யாவுக்கு மறுப்பு தெரிவித்தார் என பயில்வான் பேட்டியில் பேசியிருக்கிறார்.