இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற நிலையில், புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் இன்று (23) வழங்கிவைக்கப்பட்டது. எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா, தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.
மேலும் சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் விமானியாக செயற்பட்டுள்ளார்.