பொத்துவில் – பானம கடலில் நீராடச்சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடச்சென்றிருந்த நிலையில், 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்காப்பு படையினரின் உதவியுடன் மூவர் காப்பற்றபட்டுள்ளனர்.
எனினும், 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கல்முனை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.