யாழில் பாடசாலை மாணவியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியரே 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளார் .
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்துபெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அந்த ஆசிரியரால் மேலும் சில மாணவிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது