புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ 7ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் 50 வயதுடைய இராஜாங்கனையை சேர்ந்த முச்சக்கர வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.