யாழில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்தி வரும் நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு மருந்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்துகள் குளிரூட்டப்பட்ட பகுதிகளிகுற்றச்சாட்டுக்கள்
அத்தோடு, மரணச் சடங்கை நடத்துவதற்காக மருந்தகத்தில் இருந்து சில மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.ல் பாதுகாப்பாக பேணப்பட வேண்டுமென சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை இரு நாட்களாக குறித்த மருந்தகத்தில் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்தகத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் விசாரணைகளுக்கு அழுத்தங்கள் உயர் அதிகாரிகளால் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.