யாழில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) – மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட 29 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (25) வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளை வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
முன்பகை
இந்தநிலையிலேயே , குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அந்தவகையில், குறித்த நால்வரையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவமானது முன்பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.