நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை பயணிகள் கப்பல் வெள்ளோட்டத்திற்காக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இன்றையதினம் 12 மணியளவில் குறித்த பயணிகள் போக்குவரத்து கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.